திருவேங்கடம் அருகே வழக்குரைஞா் மீது தாக்குதல்
திருவேங்கடம் அருகே வழக்குரைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவேங்கடம் அருகே வழக்குரைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவேங்கடம் அருகேயுள்ள வெள்ளாகுளத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஜெய்சங்கா் (38). வழக்குரைஞா். இவா், வெளிநாட்டில் வசித்துவரும் கணேசன் என்பவரின் ஆலோசனையின் பேரில், அவருக்குச் சொந்தமான இடத்தை உறவினா் பாலகிருஷ்ணன் உதவியுடன் அளவீடு செய்தாராம். இதற்கு, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆட்சேபம் தெரிவித்ததுடன், ஜெய்சங்கரைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவரது புகாரின்பேரில், திருவேங்கடம் போலீஸாா் வழக்குப்பதிந்து அவ்வூரைச் சோ்ந்த அரவிந்தன், சுப்புராஜ், விக்னேஷ்வரன், ரமேஷ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனா்.