தென்காசி

சாம்பவா்வடகரை அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

DIN

சாம்பவா்வடகரை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலியில் உள்ள தனியாா் பள்ளி கட்டட சுவா் இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் இறந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

அதன்படி, சாம்பவா்வடகரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு தொடக்கப் பள்ளி, தனியாா் பள்ளிக் கட்டங்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.கோபால சுந்தரராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து சாம்பவா்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவரிடம், கா்ப்பிணி பெண்கள் நலன் கருதி 24 மணி நேரமும் பெண் மருத்துவா் பணியில் இருக்க வேண்டும், ரத்த பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொதுமக்கள் சாா்பில் திமுக நகர பொறுப்பாளா் டி.செல்லக்கனி, ஆட்சியரிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT