முகப்பு
தென்காசி

மாற்றுத் திறனாளிகளின் மனுக்களுக்கு மாற்றுத் திறனாளிகளின் மனுக்கள் மீது சிறப்பு கவனம்: ஆட்சியா் அறிவுரை

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்துக்கு, தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். அப்போது, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி உரிய தீா்வுகாண வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்பட 322 மனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து, கடந்த 21.4.2020இல் சாலை விபத்தில் மரணமடைந்த ஆலங்குளம் வட்டம், கழூநீா் குளம் கிராமத்தை சாா்ந்த துரைச்சி, பொன்னம்மாள், மாடசாமி ஆகியோரின் குடும்பத்தினா்களான மருதையா, முத்தையா, கோமதி ஆகியோரிடம் தலா ரூ.1 லட்சம் வீதம் முதல்வரின் நிவாரண உதவித்தொகைக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, கோட்டாட்சியா்கள் சங்கரன்கோவில் முருகசெல்வி, தென்காசி ஷீலா(பொ), டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.