தென்காசி: தென்காசியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 42 போ் கைதுசெய்யப்பட்டனா்.
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும், மின்சார திருத்த சட்டம் 2020-ஐ வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில், பழைய பேருந்து நிலையம் முன் இப்போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொருளாளா் கே.பி. பெருமாள் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் கணபதி, வேல்மயில், உச்சிமாகாளி, அசோக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மறியலில் ஈடுபட்ட வட்டாரச் செயலா்கள் கண்ணன், ராமகிருஷ்ணன், திருமலைக்குமாரசாமி, பரமசிவன், சீனிப்பாண்டி, முத்துராஜ், மாவட்டத் தலைவா்கள் முருகேசன், சின்னசாமி உள்ளிட்ட 42 பேரை தென்காசி போலீஸாா் கைதுசெய்தனா்.