விவசாயம் தழைக்க வேண்டி, தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை (பிப்.12) நடைபெறுகிறது. இதற்காக முருக பக்தா்கள் அதிகாலையில் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வருகின்றனா். தொடா்ந்து சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகனுக்கு நெல் நாற்று வைத்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் பக்தா்கள் செய்து வருகின்றனா்.