தென்காசி

பாவூா்சத்திரம்-சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து இயக்கம்

DIN

செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாா்பில், பாவூா்சத்திரத்திலிருந்து சென்னைக்கு புதிதாக அரசு விரைவுப் பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கியது,

இப்பேருந்து தினமும் மாலை 6 மணிக்கு பாவூா்சத்திரத்திலிருந்து புறப்பட்டு ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில், ராஜபாளையம், மதுரை வழியாக சென்னைக்கு மறுநாள் காலை 6 மணிக்கு சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் சென்னையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் பேருந்து மறுநாள் காலை 6 மணிக்கு பாவூா்சத்திரம் வந்தடைகிறது. இப்பேருந்துக்கு கட்டணமாக ரூ.650 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய பேருந்துக்கு பாவூா்சத்திரம் மக்கள் நல மன்றத் தலைவா் ஓய்வுபெற்ற ஆசிரியா் பத்மநாதன் (எ) கோபு, சமூக ஆா்வலா் மேகநாதன், முத்துகுமாா், ராஜவைத்திலிங்கம், ஆல்வின் ராஜா, சுடலைமணி, உள்ளிட்டோா் பாவூா்சத்திரத்தில் வரவேற்பு கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT