மேலப்பாவூா் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை
தென்காசி மாவட்டம், மேலப்பாவூா் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டம், மேலப்பாவூா் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலப்பாவூரில் உள்ள மதுபானக் கடையின் மூலம் அவ்வப்போது ஜாதி மோதல் ஏற்படுகிறது. இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால், பள்ளி மாணவா், மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, அக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், திமுக பொறுப்புக் குழு உறுப்பினா் ஜெயக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி நகரச் செயலா் கணேசன் மற்றும் மேலப்பாவூரைச் சோ்ந்த அனைத்து சமுதாய மக்கள் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்ட முடிவில் கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.