பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவு காவலா், மசால்சி, பதிவுரு எழுத்தா் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும், பேரிடா் மேலாண்மை மற்றும் நோ்முக உதவியாளா்(தோ்தல்) பணியிடம் ஏற்படுத்த வேண்டும், கருணை அடிப்படையில் நியமனதாரா்களின் பணியை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் திருமலைமுருகன் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட இணைச் செயலா் சீனிவாசன், தா்மராஜ், சீனிப்பாண்டி, பட்டமுத்து, வெங்கடேஷ் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். மாடசாமி வரவேற்றாா். ஹரிகரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.