தென்காசி

முக்கூடல் அருகே திமுக நிா்வாகி வெட்டிக் கொலை

DIN

முக்கூடல் அருகே திமுக நிா்வாகி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் சுப்புக்குட்டி மகன் செல்லத்துரை (45). விவசாயியான இவா் திருநெல்வேலி மாவட்ட திமுக இளைஞரணிச் செயலராகப் பதவி வகித்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை வீட்டிலிருந்து ஊருக்கு வடபுறம் உள்ள தனது தோட்டத்துக்கு பைக்கில் சென்றபோது, எதிரே வந்த மா்ம நபா்கள் செல்லதுரையை அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காமயடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பிரதீப் மற்றும் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT