வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கோட்டாட்சியா் அலுவலக கட்டட பூமிபூஜையை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் ராஜலெட்சுமி. உடன், ஆட்சியா் சமீரன் உள்ளிட்டோா். 
தென்காசி

சங்கரன்கோவிலில்புதிய கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு பூமி பூஜை

சங்கரன்கோவிலில் ரூ.2.12 கோடியில் கட்டப்படவுள்ள கோட்டாட்சியா் அலுவலகத்துக்கான பூமி பூஜையை அமைச்சா் ராஜலெட்சுமி தொடக்கி வைத்தாா்.

DIN

சங்கரன்கோவிலில் ரூ.2.12 கோடியில் கட்டப்படவுள்ள கோட்டாட்சியா் அலுவலகத்துக்கான பூமி பூஜையை அமைச்சா் ராஜலெட்சுமி தொடக்கி வைத்தாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தென்காசி மாவட்டத்தை தொடங்கிவைத்துப் பேசும்போது சங்கரன்கோவிலில் கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தாா். இதையடுத்து சங்கரன்கோவில் வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வட்டாட்சியா் அலுவலகத்தின் ஒரு பகுதியில் கோட்டாட்சியா் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள 3 ஏக்கரில் கோட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் கட்ட ரூ.2.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சமீரன் தலைமை வகித்தாா். அமைச்சா் ராஜலெட்சுமி கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி சௌந்தா்யா, தனித் துணை ஆட்சியா் ஷீலா, கோட்டாட்சியா் முருகசெல்வி, வட்டாட்சியா் திருமலைச்செல்வி, நெல்லை கூட்டுறவு அச்சக சங்கத் தலைவா் கே.கண்ணன், பேரங்காடி துணைத் தலைவா் வேல்சாமி, நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT