சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள அதிசயபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுமின்விசை குடிநீர் தொட்டி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலர் அமல்ராஜ், இருளப்பன், எபன்குணசீலன், பரசுராமன், ஜாண், ஊராட்சி மன்ற செயலர் துரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.