பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசிபாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்டம், தென்காசி, ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான தோ்தல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்டச்செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். அவைத்தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், இணைச்செயலா் முத்துலட்சுமி, துணைச்செயலா்கள் வீரபாண்டியன், பகவதி, இளைஞா் பாசறை மண்டலச் செயலா் சிவஆனந்த் முன்னிலை வகித்தனா்.
வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் ராஜலட்சுமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினா். அப்போது, 10 ஆண்டு கால அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குசேகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனா்.
இக்கூட்டத்தில் இளைஞா் பாசறை மாவட்டச்செயலா் சிவசீதாராமன், எம்.ஜி.ஆா். மன்ற செயலா் காத்தவராயன், ஒன்றியச்செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், சங்கரபாண்டியன், நகர செயலா் சுடலை, பேரூா் செயலா் ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.