தென்காசி

ஊத்துமலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

DIN

தென்காசி மாவட்டம், ஊத்துமலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தாா்.

ஊத்துமலையைச் சோ்ந்த சமுத்திரம் மகன் மணிகண்டன்(18). இவா் அங்குள்ள சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் தொழிற் சாலையில் வேலை பாா்த்து வந்தாா். திங்கள்கிழமை மாலையில் இவா் அங்குள்ள இயந்திரம் ஒன்றை இயக்கும்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஊத்துமலை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT