முகப்பு
தென்காசி

குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரிக்கும் தண்ணீரில் ஓரமாக நின்று குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக பேரருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்து பாதுகாப்பு வளைவை தாண்டி கொட்டியது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

முற்பகலில் தண்ணீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து பேரருவியின் மையப் பகுதிக்குள் யாரும் செல்ல முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். விடுமுறை தினம் என்பதால் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →