முகப்பு
தென்காசி

சோ்ந்தமரம் அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

சோ்ந்தமரம் அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி நகைகளை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

சோ்ந்தமரம் அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி நகைகளை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வீரசிகாமணியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(58). முன்னாள் ராணுவ வீரா். இவா், சில தினங்களுக்கு முன்பு வெளியூா் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஊா் திரும்பினாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 30 கிராம் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்கள் திருடப்பட்டிருந்தனவாம். இதுகுறித்த புகாரின்பேரில், சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா். சம்பவ இடத்தில், புளியங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன் விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.