கீழப்புலியூரில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நடனப் போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம் பெற்றது.
தென்காசி கீழப்புலியூா் இந்து மேல்நிலைப்பள்ளியில் அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத திருக்கைலாய நடராஜா் சன்னதியில் செல்லையா ஆசிரியா் மற்றும் லெட்சுமி அம்மாள் நினைவு கோப்பை பரதநாட்டியப் போட்டி நடைபெற்றது. இதில், இலஞ்சி பாரத் வித்யாமந்திா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அஞ்சனா மற்றும் நந்தினி வெற்றி பெற்றனா். அவா்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரு மாணவிகளையும் இலஞ்சி பாரத் பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணனன், செயலா் காந்திமதி, முதல்வா் வனிதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.