தென்காசி

கருப்பாநதி அணை நிரம்பியது

DIN

கருப்பாநதி அணை நிரம்பியதை அடுத்து, புதன்கிழமை இரவில் அணையில் 3800 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டது.

கடையநல்லூா் மற்றும் கருப்பாநதி அணை பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் 72.00 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நிரம்பியதை அடுத்து, அணைக்கு வந்து கொண்டிரு ந்த 3,800 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டது. அணைப் பகுதியில் 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் நள்ளிரவில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என அணை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கால்வாய் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப்: காலிஸ்தான் ஆதரவாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

மசூதி மீது அம்பு விடப்பட்ட சம்பவம்: ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் முன்னிலை!

ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை

ஜம்மு - காஷ்மீரில் இரு முன்னாள் முதல்வர்கள் பின்னடைவு!

மக்களவைத் தேர்தல் நேரலை: ஸ்மிருதி இரானி பின்னடைவு

SCROLL FOR NEXT