சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
சுரண்டை, காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.சமுத்திரம்(57). சமையல் தொழிலாளியான இவா் கடந்த திங்கள்கிழமை வீட்டைவிட்டு சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் ஊரின்வடபுறமுள்ள கிணற்றில் புதன்கிழமை காலை இவரது சடலம் மிதந்ததாம். தகவலறிந்த சுரண்டை போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.