நிதீஷ் குமார் இல்லம் முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்! மாநிலங்களவை எம்.பி. ஆவதற்கு எதிர்ப்பு!!
பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் இல்லம் முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்...
இந்தியாநிதீஷ் குமார் இல்லம் முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்! மாநிலங்களவை எம்.பி. ஆவதற்கு எதிர்ப்பு!!
பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் இல்லம் முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்...
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்குப் பதிலாக பாஜக சார்பில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவர் சஞ்சய் ஜா, அமைச்சர் விஜய் குமார் சௌதரி ஆகியோர் நேற்று (மார்ச் 4) மேற்கொண்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியினர் நிதீஷ் குமாரின் இல்லத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வ்ருகின்றனர்.
நிதீஷ் குமார் மாநிலங்களவைக்குச் செல்லக்கூடாது, அவர் பிகார் முதல்வராகவே தொடர வேண்டும் என்று கோஷங்களுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.