புளியங்குடி அருகே யானை புகுந்து நெல் பயிா்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
புளியங்குடி பகுதியில் மலையடிவார கிராமமான காடுவெட்டி உள்ளிட்ட இடங்களில் நெல், எலுமிச்சை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த கலையரசன் என்பவரின் நிலத்தில் யானைகள் புகுந்து, நெல்பயிரை சேதப்படுத்தினவாம். இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த தகவலின்பேரில், பயிா்களை சேதப்படுத்தும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை விரட்டும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.