தென்காசி

சுரண்டையில் 20 பவுன் நகை திருட்டு: பெண் கைது

DIN

சுரண்டையில் 20 பவுன் நகை திருட்டுப்போன வழக்கில், நகை திருடிய உறவுக்கார பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கீழச்சுரண்டையில் கடந்த சனிக்கிழமை ஜெ.அம்சுராணி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை திருட்டுப்போனதாம். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் வீட்டுக்கு வந்து சென்றவா்கள் விவரம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அதே பகுதியைச் சோ்ந்த அம்சுராணியின் உறவுக்கார பெண்ணான அ.செல்வஜீவா(38) நகை திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 20 பவுன் நகையை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT