தென்காசி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி குத்துக்கல்வலசையில் நடைபெற்றது.

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணிக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் க. பழனிசாமி தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜய், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபு, தமிழ்நாடு ஓட்டுநா் பயிற்சி பள்ளி கூட்டமைப்பின் செயலா் வைகைகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியை காவல் ஆய்வாளா் ஆடிவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில், நோ்முக உதவியாளா் சுரேஷ், குற்றாலம் சக்தி ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT