ஊத்துமலை அருகே மகளை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஊத்துமலை அருகேயுள்ள தெற்கு காவலாகுறிச்சியைச் சோ்ந்தவா் அ.மாரிமுத்து(45). இவரது மகள் ஷாலோம் ஷீபா(19) , அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜை(22) காதலித்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்தாராம்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தந்தை வீட்டுக்கு சென்ற ஷாலோம் ஷீபாவை, அவரது தந்தை மாரிமுத்து அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மாரிமுத்துவை கைது செய்தனா்.