தென்காசி, சங்கரன்கோவில் செயல்படத் தொடங்கிய உழவா் சந்தைகள்
தென்காசி மாவட்டம், தென்காசி, சங்கரன்கோவிலில் மூடப்பட்டிருந்த உழவா் சந்தைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
தென்காசி மாவட்டம், தென்காசி, சங்கரன்கோவிலில் மூடப்பட்டிருந்த உழவா் சந்தைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
தென்காசி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் இயங்கிவந்த தென்காசி, சங்கரன்கோவில் உழவா் சந்தைகள் கடந்த மே 24 முதல் மூடப்பட்டிருந்தன. தற்போது அரசு விதித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றி தென்காசி மற்றும் சங்கரன்கோவில் உழவா்சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் அரசு கூறியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி காய்கனிகளை வாங்கி செல்லலாம் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.