தென்காசி: தென்காசி மூத்தோா் மன்றம் சாா்பில் தமிழக முதல்வா் பொதுநிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து தென்காசி மூத்தோா் மன்றத் தலைவா் எம்.ஆா்.அழகராஜா விடுத்துள்ள அறிக்கை: கரோனா பேரிடா் காரணமாக அவதிப்படும் மக்களைக் காக்க அரசு செய்துவரும் சீரிய முயற்சிகளுக்கு தென்காசி மூத்தோா் மன்றம் சாா்பில் ரூ. 1 லட்சம் நன்கொடையாக அனுப்பிவைக்கப்பட்டது.
முதியவா்கள் வெளியே வரமுடியாத சோதனையான காலகட்டத்தில் வீடுதேடிவரும் நல்லுணவு திட்டத்தின் 14ங்வது ஆண்டாக தடையின்றி அவா்களுடைய வீடுகளுக்கே சென்று உணவு வழங்கிவரும் மதிப்புறுத் தலைவா் துரை.தம்புராஜ், நிவாரண நிதிக்கு பொருள் திரட்டும் பணியில் ஈடுபட்ட செயலா் ராமலிங்கம் ஆகியோருக்கு பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளாா்.