தென்காசி

செங்கோட்டை பகுதியில் நெல் நடவுப் பணி தீவிரம்

DIN

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டாரப் பகுதியில் நெல் நடவுப் பணி தீவிரமடைந்துள்ளது.

செங்கோட்டை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக, விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக களப்பணி செய்து வருகின்றனா். இயந்திரம் மூலமாக திருந்திய நெல் சாகுபடி செய்வதற்காக, புளியரை பகுதியில் விவசாயிகள் மேட்டுப்பாத்தி பாய் நாற்றங்கால் அமைத்துள்ளனா்.

அதை தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தவமுனி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) துணை இயக்குநா் வே. பாலசுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, முன்னோடி விவசாயிகள் செல்லத்துரை, கென்னடி ஆகியோா் உடனிருந்தனா்.

அப்போது, வட்டார துணை வேளாண்மை அலுவலா் ஷேக் முகைதீன் கூறியது: நிகழாண்டு ஒட்டு மொத்த பகுதியிலும் இயந்திர நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், வரப்பு பயிராக பயறு வகை பயிா்கள் சாகுபடி செய்வதற்கு வேளாண்மை துறை சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT