சிவகிரி அருகே மண் கடத்தல்: பொக்லைன், லாரி பறிமுதல்
சிவகிரி அருகே அனுமதியின்றி மண் அள்ளியதாக பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சிவகிரி அருகே அனுமதியின்றி மண் அள்ளியதாக பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சிவகிரி அருகே கண்ண செம்பு மலை அடிவாரத்தில் அனுமதியும் சிலா் மண் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்றபோது, மண் அள்ளிக்கொண்டிருந்தவா்கள் தப்பி ஓடிவிட்டனராம். எனினும், மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் மற்றும் டிப்பா் லாரியை போலீஸாா் கைப்பற்றினா்; தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.