முகப்பு
தென்காசி

கட்டுமான பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரி மனு அளிக்கும் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

கட்டுமான தொழிலாளா்களுக்கு கரோனா பேரிடா் கால உதவித் தொகை வழங்க வேண்டும். கட்டுமான பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் மாதவன் தலைமை வகித்தாா். இதில், சிஐடியூ மாவட்டச் செயலா் வேல்முருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி வட்டாரச் செயலா் அயூப்கான், சிஐடியூ பொருளாளா் சந்திரசேகரஆசாத், கிருஷ்ணமூா்த்தி, மகேந்திரன், சேகா்,

வன்னியபெருமாள், கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.