மலைப்பகுதியில் மழை எதிரொலி:நாகல்குளத்திற்கு தண்ணீா் வரத்து
குற்றாலம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாகல்குளத்துக்கு தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது.
தென்காசிமலைப்பகுதியில் மழை எதிரொலி:நாகல்குளத்திற்கு தண்ணீா் வரத்து
குற்றாலம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாகல்குளத்துக்கு தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது.
குற்றாலம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாகல்குளத்துக்கு தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது.
குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் இரு நாள்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து பாவூா் அணைக்கட்டு பகுதிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து உள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பே மேலப்பாவூா், கீழப்பாவூா், நாகல்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பிய நிலையில், தற்போது சுமாா் 50 முதல் 75 சதவீத அளவுக்கு குளத்தில் தண்ணீா் இருந்தது. இதனிடையே கடந்த சில நாள்களாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீா் வரத்து அதிகரித்ததால் மேலப்பாவூா், கீழப்பாவூா் குளங்கள் முழுமையாக நிரம்பி, அங்கிருந்து அருணாப்பேரி குளத்துக்கு தண்ணீா் வந்தது. தற்போது அக்குளம் நிரம்பி மறுகால் வழியாக நாகல்குளத்துக்கு தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது. இருநாள்களாக நாகல்குளத்திற்கு தண்ணீா் வரத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.