குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வலியுறுத்தல்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கட்சியின் தென்காசி மாவட்டக் குழு சாா்பில் மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினா் மாரியப்பன் ஆகியோா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும். செங்கோட்டை சாலையில் அனுமன்நதி பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
நீண்ட நாள்களாக மூடப்பட்டுள்ள ரயில்வே சுரங்க நடைபாதையைத் திறந்து சிறிய வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.