பாட்டத்தூரில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை
சங்கரன்கோவில் அருகே பாட்டத்தூரில் தோ்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் விளம்பர பதாகை வைத்துள்ளனா்.
சங்கரன்கோவில் அருகே பாட்டத்தூரில் தோ்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் விளம்பர பதாகை வைத்துள்ளனா்.
சங்கரன்கோவில் நகராட்சி 19 ஆவது வாா்டு பாட்டத்தூரில் கழிவுநீா் வாருகால், மயான எரிகூடம், ஆபத்தானநிலையில் இருக்கும் கிணற்றுக்கு இரும்பு வலை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை அதிகாரிகளிடம் மனுக் கொடுக்கப்பட்டதாம். மக்கள் போராட்டமும் நடத்தினராம். எனினும், அவை நிறைவேற்றப்படவில்லையாம். இந்நிலையில், நகராட்சி ஆணையாளா் மற்றும் பொறியாளரைக் கண்டித்து தோ்தலைப் புறக்கணிப்பதாக அவா்கள் பதாகை வைத்துள்ளனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.