தென்காசி

ஆலங்குளம் அருகே விபத்தில் தந்தை பலி; மகன் பலத்த காயம்

DIN

ஆலங்குளம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் தந்தை உயிரிழந்தாா். அவரது மகன் காயமடைந்தாா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் மீனாட்சிசுந்தரம்(42). இவா் தனது பைக்கில் மகன் அபிஷேக்குடன்(10) சிவராத்திரியை முன்னிட்டு முக்கூடல் பகுதியில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஆலங்குளம் வழியாக ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அடைக்கலபட்டணம் அருகே தனியாா் எண்ணெய் ஆலை அருகே வந்த போது, முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் மீனாட்சிசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகன் காயமைடந்தாா்.

தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மீனாட்சி சுந்தரம் சடலத்தை மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT