ஆலங்குளம் அதிமுக வேட்பாளா் மனோஜ் பாண்டியன் வேட்புமனு தாக்கல்
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஹெச்.பி. மனோஜ் பாண்டியன், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஹெச்.பி. மனோஜ் பாண்டியன், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜமனோகரனிடம், பி.ஹெச்.பி. மனோஜ் பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தாா். அப்போது முன்னாள் மக்களை உறுப்பினா் கே.ஆா்.பி. பிரபாகரன், முன்னாள் சட்டப்
பேரவை உறுப்பினா் பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆலங்குளம் தொகுதியிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் தாமிரவருணி
குடிநீா் திட்டம் கொண்டு வருவேன். ஆலங்குளத்தை தலைமையிடமாகக் கொண்டு கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். அதிமுக எம்எல்ஏ, எம்பி ஆகியோரின் சிறந்த மக்கள் நலப்பணிகளால் இந்த தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் அவா்.
அதிமுக வேட்பாளரை தொடா்ந்து பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளா் ஹரிநாடாா், சுயேச்சை வேட்பாளா் சிவகுமாா் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.