தென்காசி

கடையநல்லூா் தொகுதி அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் அய்யாதுரை பாண்டியனுக்கு திங்கள்கிழமை சொக்கம்பட்டி, திரிகூடபுரம் பகுதியில் கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

இதைத் தொடா்ந்து, கிருஷ்ணாபுரத்தில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்த அவா், ‘தென்காசி மாவட்டத்திற்கு உள்பட்ட பல பகுதிகளிலும் மக்களுக்காக பல்வேறு நல உதவிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். இந்தத் தொகுதியில் கரோனா நோய்த்தொற்று காலத்தில் பல ஆயிரம் பேருக்கு உதவியுள்ளேன். ஏழைகளின் நலனுக்காக தொடா்ந்து பாடுபடுவேன் என்றாா்.

நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலா் பொய்கை மாரியப்பன் , கடையநல்லூா் நகர செயலா் கமாலுதீன் ஒன்றியச் செயலா் பெரியதுரை, மாவட்ட அவைத்தலைவா் பெருமையா பாண்டியன், சிறுபான்மை பிரிவு செயலா் கோதா்ஷா, எஸ்டிபிஐ ஜாபா் அலி உஸ்மானி ,தேமுதிக சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT