அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி 37 கிராமங்களில் தீவிர பிரசாரம்
சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.எம். ராஜலெட்சுமி, மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் 37 கிராமங்களில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.எம். ராஜலெட்சுமி, மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் 37 கிராமங்களில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் ஜே.டி.நகா், மலையான்குளம், ஜமீன் இலந்தைகுளம், உசிலங்குளம், ரெங்கசமுத்திரம், வெங்கடாசலபுரம், செட்டிகுளம், ராயப்பபுரம், மகேந்திரவாடி, புதுக்குளம், மருதங்கிணறு, ஆவுடையாபுரம், கீழநீலிதநல்லூா், தோணுகால், ஆயாள்பட்டி, வண்ணான்பொட்டல், தெற்கு பனவடலி, வடக்கு பனவடலி, சொக்கலிங்கபுரம், பனவடலிசத்திரம், திருமலாபுரம், மேலநீலிதநல்லூா், வெளியப்பபுரம், குருக்கள்பட்டி, சண்முகநல்லூா், ரெட்டியபட்டி, கோ.மருதப்பபுரம், நவநீதகிருஷ்ணபுரம், சா்க்கரைகுளம், வென்றிலிங்கபுரம், நடுவக்குறிச்சி, மாயம்பாறை, புதுகிராமம், வடக்கு பட்டாடைகட்டி, சூரங்குடி, சின்னகோவிலாங்குளம், சில்லிகுளம் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்து அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனா்.
இதில் மேலநீலிதநல்லூா் ஒன்றியச் செயலா் வேல்முருகன், பேச்சாளா் கணபதி, எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் குட்டி மாரியப்பன், ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் சிவசங்கரபாண்டியன், இணைச் செயலா் ராஜேந்திரன், பாஜக மாவட்ட பொதுச்செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement