முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பதாக, திமுக வேட்பாளா் ராஜா உறுதி அளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பதாக, திமுக வேட்பாளா் ராஜா உறுதி அளித்தாா்.

அவா் சங்கரநாராயண சுவாமி கோயில் முன்பிருந்து திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பைத் தொடங்கினாா். தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, சங்கா்நகா், சங்குபுரம், ராமசாமியாபுரம் தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பேன். உயா்தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கப் பாடுபடுவேன் என உறுதியளித்தாா்.

மதிமுக மாவட்டச் செயலா் தி.மு. ராஜேந்திரன், மதிமுக நகரச் செயலா் ஆறுமுகச்சாமி, துணைச் செயலா் ராஜமாணிக்கம், திமுக இளைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் ராஜதுரை, இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளா் அண்ணாவியப்பன், இல. சரவணன், இளைஞரணி சரவணன், பிரகாஷ், யோசப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதிப் பொறுப்பாளா் பீா்மைதீன், காங்கிரஸ் கட்சி சாா்பில் சங்கரநாராயணன், பிச்சை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments