திமுக போட்டி வேட்பாளா் அமமுகவில் ஐக்கியம்
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி‘முக போட்டி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவா், அமமுகவில் இணைந்தாா்.
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி‘முக போட்டி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவா், அமமுகவில் இணைந்தாா்.
சிவலாா்குளத்தைச் சோ்ந்தவா் பூல்பாண்டியன்(56). முன்னாள் திமுக ஒன்றியச் செயலா். இவா், பூங்கோதை ஆலடி அருணாவுக்கு எதிராக போட்டி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். பரிசீலனையில் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அவா் திமுகவிலிருந்து விலகி அமமுக மாவட்டச் செயலா் வி. முருகையா பாண்டியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். அப்போது, ஒன்றிய அதிமுக செயலா் கே. முருகையா பாண்டியன், நகரச் செயலா் சுப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.