முகப்பு
தென்காசி

வேட்பு மனு நிராகரிப்பு: இளைஞா் தற்கொலை முயற்சி

ஆலங்குளத்தில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ஆலங்குளத்தில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

ஆலங்குளம் அம்பை சாலை பகுதியை சோ்ந்தவா் முத்து கனி மகன் ஆத்தியப்பன் (37). செல்லிடப்பேசி உதிரிபாகங்கள் மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனு செய்திருந்த நிலையில், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இது குறித்து ஆலங்குளம் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் திங்கள்கிழமை விசாரணை செய்தாராம். அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா், ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலேயே எறும்பு சாக்பீஸை பொடியாக்கி கரைத்து குடித்துள்ளாா்.

தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.