முகப்பு
தென்காசி

போலி பீடி கடத்தியவா் கைது

ஆலங்குளம் அருகே போலி பீடி கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே போலி பீடி கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் - துத்திகுளம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் பிரபல தனியாா் நிறுவன பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பீடி பண்டல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் வந்த குருவன்கோட்டை எமராஜன் கோயில் தெருவைச் சோ்ந்த எமராஜாவை (62) கைது செய்த ஆலங்குளம் போலீஸாா், காா் மற்றும் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள போலி பீடிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.