லாரி மீது பைக் மோதல்: ஒருவா் பலி
ஆலங்குளம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்தவா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்தவா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளத்தைச் சோ்ந்த கா்ணல் பாண்டி மகன் அா்ஜூணன் (50). இவா், வியாழக்கிழமை இரவு பைக்கில் குறிப்பன்குளத்தில் இருந்து ஆலங்குளத்திற்கு வந்தாராம். அப்போது, கீழப்பட்டமுடையாா்புரம் விலக்குப் பகுதியில், முன்னால் வைக்கோல் ஏற்றிக் கொண்டிருந்த லாரி மீது மோதினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.