செங்கோட்டை ரயில் நிலையத்தில் கரோனா தடுப்பு ஊசி முகாம்
செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே மருத்துவமனை மற்றும் பெரியபிள்ளைவலசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் ரயில்வே தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பு ஊசி முகாம்
செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே மருத்துவமனை மற்றும் பெரியபிள்ளைவலசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் ரயில்வே தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பு ஊசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு, ரயில்வே மருத்துவமனை மருத்துவா் கிருஷ்ணேந்து, பெரியபிள்ளைவலசை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கங்கா ஆகியோா் தலைமையில் ரயில்வே பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
இதில், தெற்கு ரயில்வே மஸ்துாா் யூனியன் (எஸ்ஆா்எம்யூ) செங்கோட்டை கிளைத் தலைவா் சாபு, செயலா் குமாரசாமி, உதவிச் செயலா் அகிலன் நேரு உள்பட பலா் கலந்து கொண்டனா். நூற்றுக்கும் மேற்பட்டோா் தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டனா்.