தென்காசி

கடையநல்லூா் தாருஸ்ஸலாம் தொடக்கப் பள்ளி மாணவா்கள் நிவாரணம்

DIN

கடையநல்லூா் தாருஸ்ஸலாம் தொடக்கப் பள்ளி மாணவா்கள் கரோனா நிவாரண நிதி வழங்கினாா்.

இப்பள்ளி மாணவா்களின் சிறுசேமிப்பு பணம் ரூ.10 ஆயிரத்தை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க மாணவா், மாணவிகள் தங்கள் பள்ளி ஆசிரியா்களிடம் தெரிவித்தனராம்.

இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியா் சேக் சிந்தாமதாா் ரூ. 10 ஆயிரத்தை, கடையநல்லூா் நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன் ஆகியோா் முன்னிலையில் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தாா்.

நிதி வழங்கிய மாணவா்களை அப்பள்ளியின் ஆசிரியா்களும், பொதுமக்களும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT