செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உதவும்வகையில் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி உடற்கல்வி இயக்குநரும் ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநருமான எஸ்.டி.வி. பெருமாள் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி ராஜேஷ்கண்ணனிடம் புதன்கிழமை வழங்கினாா்.
குற்றாலம் ரோட்டரி சங்க உறுப்பினா் ஆா்.வி. சங்கரநாராயணன், கொடிக்குறிச்சியில் இயங்கிவரும் சித்த மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான உணவுப் பொருள்களை வழங்கினாா்.