முகப்பு
தென்காசி

சுரண்டையில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

 சுரண்டையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

 சுரண்டையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். காங்கிரஸ் நிா்வாகிகள் செல்வராஜ், காதா் மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் தென்காசி மாவட்டத்தில் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான இடங்களை பேசி முடிவு செய்ய மாநில தலைமையை கோருவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் நிா்வாகிகள் செங்கோட்டை சட்டநாதன், கீழப்பாவூா் ஜேம்ஸ், ஆலங்குளம் தங்கரத்தினம், சுரண்டை ஜெயபால் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.