முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில்அமலைச் செடிகள் அகற்றும் பணி தொடக்கம்

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில் அமலைச் செடிகள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தென்காசி

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில்அமலைச் செடிகள் அகற்றும் பணி தொடக்கம்

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில் அமலைச் செடிகள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில் அமலைச் செடிகள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இக்குளத்துக்கான நீா்வரத்துக் கால்வாயில் அமலைச் செடிகள் அதிகமாக காணப்படுவதால் தண்ணீா் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், அமலைச் செடிகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், கீழப்பாவூா் பேரூா் திமுக சாா்பில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த தினத்தையொட்டி அமலைச் செடிகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பணியை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் தொடக்கிவைத்தாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் வி. மேகநாதன், பேரூா் செயலா் ரெ. ஜெகதீசன், பொருளாளா் சீ. பொன்செல்வன், நெசவாளா் அணி அமைப்பாளா் கா. ராஜாமணி, கடையம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் மகேஷ்மாயவன், தங்கேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பேரூா் திமுக சாா்பில் ராஜன் உள்ளிட்டோா் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →