பாப்பாக்குடி ஒன்றியக்குழு கூட்டம்
பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவா் பூங்கோதை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாரி வண்ணமுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்தி மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிவகாமிபுரம், ராஜீவ் காலனி, அமா்நாத் காலனி ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் புதுக் குளத்தில் இருந்து அா்பன்
குளத்திற்கு தண்ணீா் வரும் கால்வாயின் இரு கரைகளை உயா்த்தி தடுப்புச்சுவா் அமைக்கவும், புதுக்குளம் மதகில் இரும்புக் கதவுகள் அமைக்க பொதுப்பணித் துறையை கேட்டுக் கொள்ளவது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து வாா்டு உறுப்பினா்கள், ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.