முகப்பு
தென்காசி

ஆணையப்பபுரத்தில்பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆணையப்பபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆணையப்பபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் ஆட்சியரிடம் அளித்த மனு: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தபாஞ்சான் ஊராட்சிக்குள்பட்ட ஆணையப்பபுரம் கிராமத்தில் 160 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராம மக்கள் ரேஷன் பொருள்களை வாங்க ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவில் காளத்திமடத்தில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆதலால், ஆணையப்பபுரம் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எனவே ஆணையப்பபுரம் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.