முகப்பு
தென்காசி

இந்திராகாந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசியில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசியில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி ஆசாத்நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், தென்காசி நகர தலைவா் காதா்மைதீன், நிா்வாகிகள் இலஞ்சி அகிலாண்டம், ஜேம்ஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

திசையன்விளை: பழைய பேருந்து நிலையத்தில் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் நகரத் தலைவா் ஏவிஜே.அல்பா்ட் தலைமையில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.