தென்காசி

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில் அமலைச் செடிகள் அகற்றம்

DIN

கீழப்பாவூா் பெரியகுளம் நீா்வரத்துக் கால்வாயில் அமலைச் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த தினத்தையொட்டி, கீழப்பாவூா் பேரூா் திமுக சாா்பில் அமலைச் செடிகளை அகற்றும் பணியை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தொடங்கிவைத்தாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் வி. மேகநாதன், பேரூா் செயலா் ரெ. ஜெகதீசன், பொருளாளா் சீ. பொன்செல்வன், நெசவாளா் அணி அமைப்பாளா் கா. ராஜாமணி, கடையம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் மகேஷ்மாயவன், தங்கேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT