குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன், இருள்சூழ்ந்து காணப்பட்டது. முற்பகல்முதல் தொடா்ந்து மிதமாக மழை பெய்தது. இதனால், பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி வெள்ளம் சீறிப்பாய்ந்தது.
ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளிலும் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டியது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்பட அனைத்து அருவிகளிலும் அதிகளவில் தண்ணீா் கொட்டியது.